ரயில்வே டிக்கெட் கவுன்டருக்குள் வீசிட் செய்த சிங்கவால் குரங்கு - நடு நடுங்கி போன ஊழியர்கள்...

x

தெலங்கானாவில், ரயில் நிலையத்திற்கு சிங்கவால் குரங்கு வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். வாராங்கல் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டருக்குள் சிங்கவால் குரங்கு ஒன்று வந்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பயணிகள் அலறியடித்து ஓடினர். டிக்கெட் கவுன்டரில் குரங்கு, சுமார் ஒரு மணி நேரம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குரங்கு பிடிப்பவர்களை வரவழைத்து குரங்கு பிடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்