குரங்குடன் ஓட்டு போட வந்த நபர்! - ஷாக் ஆன அதிகாரிகள்

x

மகாராஷ்டிர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் ஒருவர் குட்டி லங்கூர் குரங்குடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... வார்தாவைச் சேர்ந்த வினோத் சிர்சாகர் தனது செல்லப் பிள்ளையான குட்டிக் குரங்கையும் வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்தார். தெருநாய்கள் தாக்கியதில் காயமடைந்து குணமாகி வரும் இக்குரங்கு கடந்த 3 மாதங்களாக தன்னுடனே இருப்பதாகவும், தான் எங்கு சென்றாலும் தன்னுடன் வருவது மட்டுமல்லாமல் வேறு யாரிடமும் செல்லாது என்றும் தெரிவித்தார். குழந்தை போல் அக்குரங்கு வினோத்துடன் ஒட்டிக் கொண்டு வேறு யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்