"பாஜகவுக்கு சிறுபான்மையின மக்கள் பதிலடி கொடுப்பார்கள்" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்

x

சி.ஏ.ஏ. சட்டம் நிறைவேற்றிய பாஜகவிற்கு, தேர்தலில் சிறுபான்மையின மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக மீனவரணி சார்பில் 171 மீன் விற்பனையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அம்பத்தூர் புதூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு, உதவிகளை வழங்கினார். பின்னர், சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வரும் தேர்தலில் பாஜகவுக்கு சிறுபான்மையின மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்


Next Story

மேலும் செய்திகள்