காவிரி நீர் பங்கீட்டுக்கான அளவீடு மையம்...சர்வே எடுக்க திணறிய PWD...கடுப்பாகி சென்ற அதிகாரிகள்

x

தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு காவிரி நீர் பகிர்ந்தளிக்கப்படும் நிலையில், காரைக்காலில் நீர் அளவீடு மையம் அமைக்க வேண்டும் என, மத்திய நீர்வள ஆணையத்திடம் புதுச்சேரி அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி, காரைக்காலில் நீர் அளவீடு மையம் அமைய உள்ள இடங்களை, மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கண்ணாப்பூர் வாஞ்சி ஆறு அருகே, நிலம் கையகப்படுத்த சர்வே எடுக்க முடியாமல் புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் திணறியதால், நீர்வள ஆணையத்தின் அதிகாரிகள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், காரைக்கால் ஆட்சியரை சந்திக்காமலேயே சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்