அழகான ஆண்கள் போட்டோ வைத்து மேட்ரிமோனியில் வலையை விரித்த நபர் - 250 பெண்களிடம் மெகா மோசடி.. `இதுல கம்ப்யூட்டர் இன்ஜினியர் பில்டப் வேற..'

x

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான நரேஷ் பூஜாரி என்பவர் திருமண தகவல் மையங்களில் தனது புகைப்படத்திற்கு பதிலாக அழகான இளைஞர்களின் புகைப்படம் கொடுத்து மறுமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு வலை விரித்துள்ளார். தான் கம்ப்யூட்டர் இன்ஜினியர் எனக் கூறிய அவர், பெண்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பணம் பறிப்பில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த பெண்ணை பெங்களூரு ரயில் நிலையத்திற்கு வரவழைத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற நிலையில், அவரை நகர ரயில்வே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 250க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.


Next Story

மேலும் செய்திகள்