"இந்திய எல்லையில் 96 லட்சம் ஏக்கரை ஆக்கிமிரத்த சீனாவை பற்றி பிரதமர் பேசாதது ஏன்?" - அமைச்சர் கேள்வி

x

பாஜக ஆட்சியில் இந்திய சீன எல்லைப் பகுதியில் 96 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதைப் பற்றிப் பேசாமல், பிரதமர் மோடி 50 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவைப் பற்றி பேசுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். பண மதிப்பிழப்பு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, ரஃபேல் ஊழல், தேர்தல் பத்திர ஊழல் போன்றவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு குறித்து பாஜக பேசுவதாக விமர்சித்துள்ளார்... மேலும், இந்திய நிலப்பரப்பைச் சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தார்? எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்