சபரிமலையில் மகரஜோதி பூஜை.. பத்தர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

x

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மறுநாள் 15-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளத்தில் இருந்து புறப்பட்டது. மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் காரணமாக பந்தளம் சாஸ்தா கோயில் அடைக்கப்பட்டுள்ளதால், இங்கு திருவாபரணப் பெட்டிகள் திறக்கப்படவில்லை. தேவசம்போர்டு அதிகாரிகள் திருவாபரணங்களை பெற்ற பின்னர், நித்தி கலசம் செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு திறக்கப்படாமல், அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. மூன்று நாட்கள் தலைச்சுமையாக பவனி வரும் திருவாபரணங்கள், 15-ம் தேதி மாலையில் சன்னிதானம் வந்தடையும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு திருவாபரணம் அணிவித்து தீபாராதனை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறும்


Next Story

மேலும் செய்திகள்