டிராக்டர் ஓட்டிய மகாராஷ்ட்ர முதல்வர் ..மும்பை ஜுஹு கடற்கரையில் விழிப்புணர்வு

x

மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையிலுள்ள புகழ்பெற்ற ஜுஹு கடற்கரையில் தூய்மைப் பணிகளை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தொடங்கி வைத்தார். கடற்கரையை தூய்மையாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக, கடற்கரையில் இருந்த மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஏக்நாத் ஷிண்டே, அந்த இடத்தை தண்ணீரை கொண்டு சுத்தம் செய்தார். பின்னர் கடற்கரை பகுதியில் டிராக்டரை இயக்கினார். இதனை பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள், தங்கள் செல்போனில் படம்பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்