திடீர் பேரொலி..பொங்கிய தீ பிழம்பு.. 20 கி.மீட்டர் அதிர்ந்த நிலம் - அலறி ஓடும் மக்கள்

x

திடீர் பேரொலி..பொங்கிய தீ பிழம்பு.. 20 கி.மீட்டர் அதிர்ந்த நிலம் - அலறி ஓடும் மக்கள்

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.

தீயணைப்பு துறை வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளன.

தொழிற்சாலைக்குள் பலர் சிக்கி இருக்கலாம்இருக்கலாம் என அஞ்சப்படுகிறது

ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் பெரும் வெடிப்பு, அதிர்வு 20 கிலோமீட்டர் வரை உணரப்பட்டது

வெடி சத்தத்தை கேட்டு சாலையில் சென்ற மக்கள் அலறி எடுத்து ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளன

இந்த வெடி விபத்தில்பயங்கர தீ மூண்டது, தொழிற்சாலையை மட்டுமின்றி சுற்றியுள்ள கட்டிடங்களையும் சூழ்ந்தது. அடர் புகை மற்றும் தீப்பிழம்புகள் வானத்தை நோக்கிச் செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளன

தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சேதம் மற்றும் பலி எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்