தாலி கட்டும் கடைசி நேரம்... சுயரூபத்தை காட்டிய மணப்பெண்... சினிமாவை மிஞ்சிய Climax காட்சி... மணமகனுக்கு ஷாக் மேல் ஷாக் கொடுத்த பெண்

x

பெங்களூருவை அடுத்துள்ள தொட்டபெல்லாபுரா பகுதியைச் சேர்ந்த இளம் பெண் திவ்யாவிற்கும், வெங்கடேஷுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன், துமகூரு மாவட்டத்தின் கோலாலா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்காக இரு வீட்டு உறவினர்களும், ஒன்று கூடி இருந்த நிலையில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென மணமேடையில் இருந்து எழுந்த மணப்பெண், தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என தெரிவித்தார். அப்போது, மண்டபத்தில் இருந்த தனது காதலனை கைகாட்டி, அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி மணப்பெண் மேஜர் என்பதால் அவரின் விருப்பபடி, காதலனை திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி அனுப்பி வைத்தனர்....


Next Story

மேலும் செய்திகள்