"உடனடி நடவடிக்கை.." - ECiக்கு காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் திடீர் கடிதம்

x

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய மாதிரி நடத்தைக் கொள்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் வாக்கு எண்ணிக்கை 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற உள்ளதால், ஜூன் 4 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொடர்ந்து அமல்படுத்துவது வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையற்ற சிரமங்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து, குடிமக்களின் பொருளாதார நடவடிக்கைகளில் அது ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களின் குறைகளை கேட்டறிந்து, தனியார் குடிமக்கள் மீதான கட்டுப்பாடுகளை கணிசமாக தளர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்