மெடிக்கல் ஷாப்பில் மருந்து கேட்கும் முன் சரிந்த உயிர் - மனதை உருக்கும் காட்சி

x

கர்நாடகாவின் மைசூர் கேத்தமாரணஹள்ளியில் மருந்து வாங்க மருந்தகத்திற்கு வந்தவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான ஜெகதீஷ் கடந்த 2 நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் மருத்துவர் எழுதித் தந்த மருந்துகளை வாங்க மருந்துக் கடைக்கு வந்துள்ளார்... தனது சட்டைப் பையில் இருந்த சீட்டை எடுத்துக் கொடுப்பதற்குள் திடீரென அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்த நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்... ஜெகதீஷ் மாரடைப்பால் உயிரிழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்