திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு... அடித்து செல்லப்பட்ட தேசிய நெடுஞ்சாலை - வெளியான பதைபதைக்கும் காட்சிகள்

x

ஹிமாச்சலப்பிரதேசத்தில் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் சோலன் மாவட்டத்தில், தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சண்டிகர்-சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு காரணமாக, 40 மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்