கொடநாடு.. முதல் குற்றவாளியின் 35 பக்க வாக்குமூலம்.. 9வது குற்றவாளிக்கு CBCID வச்ச குறி

x

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கில் 9 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மனோஜ் சாமியிடம் சிபிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளனர். இதற்காக, கேரளா விரைந்த சிபிசிஐடியின் தனிப்படை போலீசார், எதிர்வரும் 15 ஆம் தேதி கோவை சிபிசிஐடி ஆலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மனோஜ் சாமிக்கு சம்மனும் அனுப்பியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கின் முதல் குற்றவாளியான சயானிடம் நேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரிடம் 35 பக்கங்களுக்கு வாக்குமூலத்தை எழுதி வாங்கிய நிலையில், அவர் அளித்த தகவலின் அடிப்படையிலே மனோஜ் சாமியிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்