ஹிமாச்சல் அரசு அலுவலக சுவற்றில் காலிஸ்தான் வாசகம் - அதிரடியாக விசாரணையில் இறங்கிய போலீஸ்

x

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசு அலுவலக கட்டிட சுவரில், காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் இடம்பெற்றதால் பரபரப்பு நிலவியது. கங்க்ரா மாவட்டம் தர்மசாலாவில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிட சுவரில், காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் இடம்பெற்றன. இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை பெயிண்ட் பூசி உடனடியாக அழித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்