கேரளாவை உலுக்கிய சம்பவம்.. 5 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

x

கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட அஸ்ஃபாக் ஆலம் போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

கேரளா மாநிலம், ஆலுவாவில் பீகாரை சேர்ந்த ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டு, மார்க்கெட் பின்புறம் உள்ள குப்பைமேட்டில் சடலமாக கிடந்தார். இந்த சம்பவத்தில், பீகாரைச் சேர்ந்த அஸ்ஃபாக் ஆலம் என்பவரை போலீசார் கைது செய்து, 10 நாள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், முப்பது நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவருடைய உடலில் 52 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்