சபரிமலைக்கு லட்சக்கணக்கில் வரும் பக்தர்கள்... திணறும் நிர்வாகம் - விழிபிதுங்கும் கேரளா

x

கேரள மாநிலம் சபரிமலையில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கட்டுக்கடங்காத கூட்டத்தால், பக்தர்கள் பலர் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பம்பை, நிலக்கல், எரிமேலி, பத்தனம்திட்டா உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்துள்ளனர்.

இந்நிலையில், இருமுடி கட்டிய பக்தர்கள், ஐயப்பன் வளர்ந்த இடமான பந்தள அரண்மனையில் உள்ள வலியக்கோயில் ஐயப்பனை தரிசனம் செய்து, அங்கு தாங்கள் கொண்டு வந்த இருமுடியை உடைத்து நெய் அபிஷேகம் செய்து, ஊர் திரும்புகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்