நள்ளிரவில் வெளியான குடும்ப போட்டோ.. அதிகாலை வீட்டிற்கு சென்ற உறவினருக்கு அதிர்ச்சி

x

கேரள மாநிலம் கோட்டயத்தில், மனைவி மற்றும் 3 குழந்தைகளைக் கொன்று, கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

zநள்ளிரவில் வெளியான குடும்ப போட்டோ.. அதிகாலை வீட்டிற்கு சென்ற உறவினருக்கு அதிர்ச்சிநள்ளிரவில் வெளியான குடும்ப போட்டோ.. அதிகாலை வீட்டிற்கு சென்ற உறவினருக்கு அதிர்ச்சிகோட்டயத்தில் உள்ள அகலகுன்னம் பகுதியை சேர்ந்த ஜெய்சன் தாமஸ் என்பவருக்கு, மெரினா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருந்தனர். ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஜெய்சன் தாமஸ், நள்ளிரவு நேரத்தில் குடும்ப புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதிகாலை வேளையில், உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, தாமஸ் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் படுக்கையில் சடலமாகவும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் மனைவியை கழுத்தை அறுத்தும், 3 குழந்தைகளின் முகத்தில் தலையணையை அமுக்கிக் கொலை செய்து விட்டு தாமஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரண நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்