போதையில் நடந்த சண்டையில் துப்பாக்கியால் சுட்ட கும்பல் - கேரளாவில் அதிர்ச்சி

x

எர்ணாகுளத்தில் உள்ள கடவந்திராவில் உள்ள மதுபாரில், 4 பேர் காரில் வந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் மதுபோதையில், பார் ஊழியர்களுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களை சமதானம் செய்ய பார்மேலாளர் முயன்றபோது, மதுபோதையில் இருந்த கும்பல் திடீரென துப்பாக்கியால் சுட்டதில், ஊழியர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்