ரெட் அலர்ட் விட்டதும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர்.. கேரளாவில் அதிர்ச்சி

x

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக அதிரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மலையேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டாவில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட இருவரை தேடும் பணி தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்