சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் தவறாக நடந்த மருத்துவர்...அதிரடி காட்டிய போலீசார்

x

கேரள மாநிலம் தாமரசேரி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின சிறுமி, தான் படிக்கும் பள்ளியில் ஆசிரியை மேற்கொண்ட கவுன்சிலிங்போது அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றதாகவும், அப்போது சித்த மருத்துவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வேதனை தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து சித்த மருத்துவர் அன்வர் சாதத் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்