நிலநடுக்கமே வராமல் குலுங்கிய 40 வீடுகள்.. பயங்கர சத்தம்.. கிடுகிடுவென ஆடிய காட்சி.. கேரளாவில் திடுக்

x

கேரள மாநிலம் திருப்புணித்துறை கோயிலில் வானவேடிக்கைக்கு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்தபோது, அருகில் உள்ள வீடுகளில் அதிர்வு ஏற்பட்ட சிசிடிவி காட்சி பரவி வருகிறது. திருப்புணித்துறை கோயில் திருவிழாவுக்காக வாங்கி வரப்பட்ட பட்டாசுகளை ஒரு வீட்டில் வைத்திருந்தபோது, அவை திடீரென வெடித்ததில், அந்த வீடு மட்டுமன்றி சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நேரிட்டபோது, நில அதிர்வு ஏற்பட்டதுபோல் அருகில் உள்ள வீடுகள் குலுங்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்