கேரளா குண்டு வெடிப்பு சம்பவம்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்

x

கேரள மாநிலம் களமசேரி குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதான, டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், வெடிகுண்டு தயாரிப்பதற்காக அத்தாணி என்னும் ஊரில் உள்ள தனது பூர்விக வீட்டை, அவர் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவரை அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார், அங்கிருந்து தடயங்களை சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும், வெடிகுண்டு தயாரிக்க பொருட்கள் வாங்கிய கடைகளுக்கும், டொமினிக் மார்ட்டினை அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்