"நட்டாவை பிரதமர் கைது செய்வாரா?" - கெஜ்ரிவால் வழக்கில் சரத் ரெட்டி கூறியது என்ன..?

x

மதுபான கொள்கை வழக்கில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திவரும் நிலையில், சட்ட விரோத பணம் எங்கே சென்றது? என டெல்லி அமைச்சர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வரிடம் இருந்தோ அல்லது ஆம் ஆத்மி நபர்களிடம் இருந்தோ எவ்வித குற்றமும் நிரூபணம் ஆகாத நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தது இல்லை என கூறிய அரவிந்தோ பார்மா நிறுவன உரிமையாளர் சரத் ரெட்டி, கைதான சில மாதங்களில் கெஜ்ரிவாலை சந்தித்ததாக மாற்றி கூறிவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் தேர்தல் பத்திரம் மூலம் சரத் ரெட்டி 4 கோடியே 50 லட்சம் ரூபாயை பா.ஜ.க.விற்கு நன்கொடை கொடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் நட்டா கைது செய்யப்படுவாரா..? என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்