காஷ்மீர் எல்லையில் பதற்றம்...2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | Kashmir | Army

x

காஷ்மீர் எல்லையில் பதற்றம்...2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் அவந்திபுரா பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில், பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவந்திரபூராவில் உள்ள ராஜ்பூரா பகுதியில், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில், பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக, காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். மேலும், பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்