ஒரு நொடியில் தப்பிய உயிர்கள்... அமைதியாக வந்து திடீரென சீறிய புலி - நடுங்க வைக்கும் காட்சி

x

கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளைக் கண்டு ரசிப்பதற்காக ஜீப்பில் வந்த சுற்றுலா பயணிகளை புலி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது... மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலியை ஜீப் ஓட்டுநர் சுற்றுலா பயணிகளுக்குக் காண்பித்துள்ளார்... அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜீப்பை நோக்கி ஓடி வந்த புலியின் உறுமலைக்கேட்டு குலை நடுங்கிப் போயினர் சுற்றுலாப்பயணிகள்... ஜீப் ஓட்டுநர் திறமையாக சுற்றுலா பயணிகளை புலியிடம் இருந்து காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்து வந்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்