ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கு - வெளியான பகீர் பின்னணி

x

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி... கர்நாடகாவின் தாசரஹள்ளியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பரசுராம ஹதிமானியின் மகன் விநாயக் பாகலே என்பவரே கூலிப்படையை ஏவி குடும்பத்தினரை கொன்றது தெரியவந்துள்ளது. விநாயக் பாலே தனக்கு சொந்தமான சொத்துக்கள் சிலவற்றை விற்றதாகவும், இதையறிந்து ஆத்திரமடைந்த பரசுராம ஹதிமானி மகனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த விநாயக் பாலே சுமார் 65 லட்ச ரூபாய் பேரம் பேசி, கூலிப்படையினரை ஏவி குடும்பத்தினரை கொன்றது அம்பலமானது. இந்நிலையில், விநாயக்பாலே உட்பட கூலிப்படையினர் 8 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்