தாய், மகள் விபரீத முடிவு.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

x

கர்நாடகாவில், தாய் மற்றும் மகள் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கலபுரகி பகுதியை சேர்ந்த சுமலதா மற்றும் அவரது மகள் வர்ஷா ஆகிய இருவர் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், மாயமாகினர். இதுதொடர்பாக குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் மாயமான இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், சகாபாத் அருகே ஓடு காகினா ஆற்றில், 2 பெண்களின் உடல்கள் மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, ஆற்றில் இருந்த 2 பெண்களின் உடல்களை மீட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இருவரும் மாயமான சுமலதா, வர்ஷா என்பதும், ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்