வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி.. காதலனின் குடும்பத்தினர் மீது தாக்குதல்

x

கர்நாடக மாநிலத்தில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், காதலனின் குடும்பத்தினரை தாக்கியதாக பெண்ணின் உறவினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிக்கபல்லாபூர் டபர்த்தி கிராமத்தை சேர்ந்த மனோஜ், அங்கிதா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார், மனோஜின் வீட்டிற்கு சென்று அவரது தாய் மற்றும் தந்தையை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ,போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பெண்ணின் உறவினர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்