ஒரே நேரத்தில் பறிபோன 5 மாணவர்கள் உயிர்... அலறியடித்து ஓடிய மற்ற மாணவர்கள்

x

ராம் நகர் மாவட்டத்தில் உள்ள சங்கமம் என்ற இடத்திற்கு, பொறியியல் கல்லூரி மாணவர்கள் 12 பேர், சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு மாணவி ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். அவர் நீந்த முடியாமல் நீரில் மூழ்கிய அவரைக் காப்பாற்ற ஹர்ஷிதா, அபிஷேக், தேஜாஸ், வர்ஷா, சினேகா, ஆகிய ஐந்து பேரும், ஒருவர் பின் ஒருவராக சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இவர்கள் தண்ணீரில் மூழ்கியதை பார்த்த மற்ற மாணவர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து, அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கூறியுள்ளனர். பின்னர் தீயணைப்பு படையினர் வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்