கர்நாடகாவில் பயணியை ஆக்ரோஷமாக தாக்கிய நடத்துனர் - வெளியான அதிர்ச்சி காட்சி

x

பெங்களூரு மாநகர பேருந்தில் பயணித்த பெண் பயணியை நடத்துனர் தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் பெண்களுக்கு பேருந்து இலவசம். இந்த நிலையில் மாநகரப்பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர்,

தனது ஆதார் அட்டையை எடுத்து வர மறந்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனது செல்போனில் இருந்த ஆதார் அட்டை புகைப்படத்தை காட்டி உள்ளார். இதை ஏற்றுக் கொள்ளாத நடத்துனர் அந்தப் பயணியை டிக்கெட் எடுக்குமாறு கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அந்த பெண்ணை நடத்துனர் தாக்கியுள்ளார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்