மகள் - மருமகன் சண்டையால் நொடியில் பிரிந்த மாமியார் உயிர்

x

கர்நாடகாவின் துமகூரு மாவட்டத்தில் மகள் - மருமகன் இடையே நடந்த சண்டையைத் தடுக்க முயன்ற மாமியாரை, மருமகன் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொடிகேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சையது சுகைல் என்பவருக்கும், பெல்கும்பா பகுதியை சேர்ந்த அஸ்வித் உன்னிசா என்பவரின் மகளுக்கும் திருமணமானது முதலே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது குறித்து தனது தாய் அஸ்வித் உன்னிசாவிடம் சுகைலின் மனைவி புலம்பிய நிலையில், ஒவ்வொரு முறையும் மகளை சமாதானம் செய்துள்ளார். சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால், உன்னிசாவும் உடனடியாக மகள் வீட்டிற்கு சென்றபோது, சையது சுகைல் தனது மனைவியை அடிக்க சென்றுள்ளார்... மகளைக் காப்பாற்ற உன்னிசா குறுக்கே சென்று விலக்க முயன்ற போது ஆத்திரத்தில் சையது சுகைல் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து உன்னிசாவைக் கடுமையாக தாக்கியுள்ளார்... இதில், படுகாயமடைந்த உன்னிசா, மருத்துவமனையில் உயிரிழந்தார்... இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது சுகைலைக் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்