பண பிரச்சனையால் நடந்த விபரீதம் - சக நண்பனே செய்த கொடூரம்

x

கன்னியாகுமரியில் ஜார்கண்டை சேர்ந்த தொழிலாளி ஒருவர், அவரது நண்பனாலையே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்டை சேர்ந்தவர் மோகன் நகீசியா. 19 வயது இளைஞரான இவர், ஜார்கண்ட்டை சேர்ந்த தன் நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள தனியார் எஸ்டேட் ஒன்றில் தங்கி பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த மாதம் 28 ஆம் தேதி மோகன் நகீசியாவுக்கும் அவரது நண்பரான ஜார்கண்ட்டை சேர்ந்த திலேஷ் நகோசியாவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மோகன் நகீசியாவை திலேஷ் நகோசியால் கம்பால் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். இதில், படுகாயமடைந்த மோகன் நகீசியா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதில், மோகன் நகீசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே திலேஷ் நகேசியாவை கைது செய்திருந்த போலீசார், தற்போது கொலை வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்