காருக்குள் நடந்த கந்தசாமி நாடகம்.. முதலில் லிப்ட்.. அப்புறம் Remove டிரஸ் - அட்டகாசம் செய்த சுல்தானா

x

தெலங்கானா மாநிலம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில், சுல்தானா என்ற பெண் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். காரில் தனியாக வருபவர்களை நோட்டமிட்டு, அவர்களிடம் லிப்ட் கேட்கும் சுல்தானா, சிறுது தூரம் சென்ற பின் தன் ஆடைகளை தானே கிழித்துக் கொண்டு, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக நாடகமாடியிருக்கிறார். தொடர்ந்து, போலீசில் புகாரளித்து போக்சோவின் கீழ் சிறைக்கு அனுப்பி விடுவதாக மிரட்டும் சுல்தானா, பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. ஜூப்ளி ஹில்ஸ் செக் போஸ்ட் அருகே சுல்தானாவை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இது போன்ற தொடர் புகாரில் சுல்தானா மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்