கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தை... திக்.. திக் காட்சிகள்

x

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். புல்வாமா மாவட்டம், அச்சகோஸா கிராமத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியதால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர். சிறுத்தையை வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்