ஜாபர் சேட் மனைவி மேல்முறையீடு.. - விஜிலென்ஸ் க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

x

அரசு வீட்டு மனை முறைகேடு வழக்கில், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீனுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பர்வீன் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பர்வீனுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்குத் தடை விதித்தது. அத்துடன், பர்வீனின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்