பட்டைய கிளப்பும் இஸ்ரோ.. - வெளியான முக்கிய தகவல்

x

இன்சாட் 3DS செயற்கைக் கோள் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 17ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்சாட் 3DS செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 253 கிலோ மீட்டர் முதல் 36 ஆயிரம் கிலோ மீட்டர் வரை தற்போது உந்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. வரும் 28ம் தேதி செயற்கைக் கோள் இயங்குவதற்கான பணிகள் துவங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்