இருநாடுகளிடையே நட்புறவு வலுப்பெறும் - இந்திய கடற்படை தகவல்

x

இந்திய கடற்படை மற்றும் பிரான்ஸ் விமானப்படை வங்காள விரிகுடாவில் இணைந்து பணியாற்றியது, இருநாடுகளிடையேயான நட்புறவை வலுப்படுத்தும் என, இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியா-பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையில், வங்காள விரிகுடாவில், இந்திய கடற்படை மற்றும் பிரான்ஸ் விமானங்கள் இணைந்து குழுப் பணியாற்றியதை, இந்திய கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது. விலைமதிப்பற்ற படிப்பினைகள் மற்றும் அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகவும், இது, இந்தியா - பிரான்ஸ் நட்புறவு பாலங்களை வலுப்படுத்துவதுடன், ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் இந்திய கடற்படை குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்