வரலாறு படைத்த சந்திரயான் 3 - கொண்டாடிய இந்திய வீரர்கள்

x

சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதற்கு, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா என்பதை கேட்பதற்கே, சிறப்பாக உள்ளதாக கூறியுள்ளார். நம் ஒவ்வொருவருக்கும் இது பெருமைமிகு தருணம் என குறிப்பிட்டுள்ள அவர், இஸ்ரோவின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார். அதேபோல், சந்திரயான் 3 குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விராட் கோலி, அவர்கள் தேசத்தை பெருமைப்படுத்திவிட்டதாக புகழாரம் சூட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்