அயோத்திக்கு செல்லும் மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

x

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், யாத்ரிகர்களுக்கென மின்சார கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி யாத்ரிகர்களின் வருகை அதிகரித்துள்ளதால், அவர்களின் வசதிக்காக மின்சார கார் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 கிலோமீட்டருக்கு 250 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் 12 மின்சார கார்கள் இயக்கப்படுவதாகவும், மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், மின்சார கார் சேவை கண்காணிப்பாளர் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்