இவரை அடையாளம் கண்டால் உடனே போலீஸுக்கு தெரிவிக்கவும்.. 6 வயது சிறுமி கடத்தலில் திடீர் திருப்பம்

x

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூர் பகுதியைச் சேர்ந்த ரெஜி என்பவரது ஆறு வயது மகள், தனது சகோதரனுடன் வீட்டருகே டியூஷனுக்கு நடந்து சென்றபோது காரில் வந்த கும்பல் சிறுமியை கடத்தியது. சிறுமியை திரும்ப ஒப்படைக்க 10 லட்சம் ரூபாய் கேட்டு ஒரு பெண், சிறுமியின் தாயை ​செல்போனில் மிரட்டியுள்ளார். வாரிப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு கடை உரிமையாளர் செல்போனில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுதொடர்பாக கடை உரிமையாளரான பெண்ணிடம் போலீசார் விசாரித்ததில், பொருட்கள் வாங்க வந்தபோது, பெண் ஒருவர் தனது செல்போனில் பேசிவிட்டு மீண்டும் தந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரது உருவ வரைபடத்தை போலீசார் வெளியிட்டு, தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, பட்டணம்திட்டா, திருவனந்தபுரம், ஆலப்புழா பகுதிகளிலும், கொல்லம்-தென்காசி, கன்னியாகுமரி - திருவனந்தபுரம் எல்லையிலும் இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரம் பகுதியில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் பணிபுரியும் இருவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்