"நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் பாஜகவுக்கு நிதி கொடுத்தது எப்படி?" - ராகுல் கிடுக்குப்பிடி கேள்வி

x

#rahulgandhi #modi #electoralbonds

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இல்லாமல், மோடியால் வெற்றி பெற முடியாது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Vovt

இந்தியா கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மும்பையில் பெற்றது. 28 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி உரையாற்றினார். ஆயிரக்கணக்கான மக்கள் அச்சுறுத்தப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், மகாராஷ்டிர காங்கிரசில் இருந்து விலகிய மூத்த தலைவர் ஒருவர், சோனியா காந்தியை சந்தித்து, எதிர்த்து போராட முடியவில்லை என்று கண்ணீர் வடித்த‌தாக கூறினார். மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருப்பதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது என்றும் விமர்சித்தார். ஊழல் செய்வதற்கான தனி அதிகார அமைப்பாக தேர்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் பாஜகவுக்கு நிதி கொடுப்பதாக புகார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்