பணியில் இருந்த காவலர் மீது காரை ஏற்றிய பயங்கரம் - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

ஹைதராபாத் அருகே, பணியில் இருந்த காவலர் மீது காரை ஏற்றிய பயங்கரம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் சிலகாலகுடா காவல்நிலைய அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே பைக்கில் வேகமாக வந்தவரை நிறுத்த முயன்றபோது, நிறுத்தாமல் விரைந்து சென்றார். அதனை தொடர்ந்து வந்த காரை காவல் மகேஷ் நிறுத்த முயன்றதை அடுத்து, கார் காவலரின் மீது ஏறி சென்றது. இதில் படுகாயம் அடைந்த மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்