வீடு புகுந்து கொள்ளை..! - சிலிண்டரை வெடிக்க வைத்த கொடூரம் - உடல் கருகி பலியான சகோதரிகள்

x

கேரள மாநிலம் பாலக்கோட்டில் வீட்டினுள் புகுந்த கொள்ளையர், கேஸ் சிலிண்டரை திறந்து தீ வைத்ததில், சிலிண்டர் வெடித்து இரு சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவின் பாலக்கோடு அருகே நீலமலைக்குன்று பகுதியை சேர்ந்தவர் பத்மினி. 72 வயதான இவரும், இவருடைய சகோதரி தங்கமும் அருகருகில் வசித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று, பத்மினியின் வீட்டிற்குள் இருந்து பலத்த சத்தம் கேட்டு மளமளவென தீ பரவியது அக்கம்பக்கத்தினரை அதிர்ச்சியடைய செய்தது. அப்போது, வீட்டினுள் இருந்து தப்பியோட முயன்ற மணிகண்டன் என்பவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், வீட்டினுள் இருந்து பத்மினியையும், அவரது சகோதரி தங்கத்தையும் தீக் காயங்களுடன் சடலமாக மீட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், கைது செய்யப்பட்ட மணிகண்டன், 6 மாதங்களுக்கு முன்பு மூதாட்டி பத்மினியின் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த நிலையில், அப்போது மூதாட்டி தனியே வசித்து வருவதையும், அவரது வீட்டில் நகைகள் இருப்பதையும் நோட்டமிட்டுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று நகைகளை கொள்ளையடிக்க வீட்டிற்குள் புகுந்த மணிகண்டன், கேஸ் சிலிண்டரை திறந்து வைத்து மூதாட்டியை மிரட்டியதும், பின்பு சிலிண்டருக்கு தீவைத்து விட்டு நகைகளுடன் தப்ப முயன்றதும் தெரியவர, இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்