டெல்லியில் செப்.8 முதல் 10 - ம் தேதி வரை பள்ளிகள்,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

x

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10 - ம் தேதி வரை பள்ளிகள் , அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 10 வரை பொது விடுமுறை அறிவிக்க காவல்துறை, தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தேதிகளில் அனைத்து பள்ளிகள், மாநகராட்சி அலுவலகங்கள் உட்பட அரசு அலுவலகங்களுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்