அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி...மளமளவென பற்றி எரிந்த தீ

x

இமாச்சல் பிரதேசத்தில், டீசல் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று, திடீரென பிரேக் பிடிக்காததால் எதிரே இருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி தீ விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், ஸ்கூட்டரில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர்.. லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விபத்தில், 14 கடைகள், ஒரு வீடு மற்றும் வாகனங்கள் சிலவையும் தீக்கிரையாகியதாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்