பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய WCD அதிகாரிகள்..தானாக முன்வந்து உயர்நீதிமன்றம் செய்த செயல்

x

டெல்லியில் சிறுமி தொடர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

டெல்லி புராரியில் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது, கருக்கலைப்பு செய்ய முயன்றது ஆகிய வழக்குகளில் டெல்லி மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உயரதிகாரி பிரமோதய் காகா, மனைவி சீமா ராணி ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு, தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளம் வெளிப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என டெல்லி காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்