தமிழகம் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அதிர்ச்சி சேதி.. ஹாஸ்பிடல்களை தயார்படுத்த PM மோடி உத்தரவு

x

நாடு முழுவதும் வெப்பம் அதிகரித்துள்ளதால், மருத்துவமனைகளில் போதிய ஏற்பாடுகளை மேற்கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். பிரதமரின் முதன்மைச் செயலாளர், உள்துறை செயலாளர், இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ஏப்ரல் முதல் ஜூன் வரை பல்வேறு இடங்களில் வெப்பநிலை எப்படி இருக்கும் என்பது குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பின்னர், மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து வெப்ப அலையை எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மேலும், மருத்துவமனைகளில் போதிய ஏற்பாடுகளை செய்வதோடு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்ட பிரதமர், காடுகளில் தீ விபத்து சம்பவங்களை விரைவாக கண்டறிந்து தீயை அணைக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்


Next Story

மேலும் செய்திகள்