"ரூ.15 தரமுடியாது... ரூ.12 தரமுடியும்..!" டீ கடையை சூறையாடிய இளைஞர்கள்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x

ஹரியானாவில் தேநீர் கடையை இளைஞர்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியானா மாநிலம் குருகிராம் பாலம் விஹார் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு இளைஞர்கள் சிலர் வந்தனர். 3 தேநீருக்கு தலா15 ரூபாய் வீதம் 45 ரூபாய் பில் போடப்பட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்த இளைஞர்கள், ஒரு டீ 12 ரூபாய் என பில் போடுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து கடை உரிமையாளருடன் வாக்குவாதம் முற்றியது. பின்னர் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், கடையில் இருந்த நாற்காலிகளை தூக்கி வீசியெறிந்து பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியான நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்