ஹர்திக் பாண்டியாவை ஏமாற்றிய சகோதரர் - அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்

x

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹார்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா ஆகியோரின் சகோதரர் வைபவ் பாண்டியா, பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஹார்திக் மற்றும் க்ருணால் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதில், சகோதரர்கள் மூவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனத்தில் இருந்து, ஒரு கோடி ரூபாய் பணத்தை வைபவ் பாண்டியா மற்றொரு வங்கி கணக்கில் மாற்றியிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் வைபவ் சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்து, லாப விகிதத்தை அதிகரித்ததாகவும், அதன்மூலம் சுமார் 4 கோடியே 3 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வைபவ் பாண்டியாவை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்